செவ்வாய், மே 07, 2013


ஏக இறைவனின் திருப்பெயரால்...

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ {60}

"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;49 எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன்.40:60





அஜ்மீர் தர்ஹாவில் வருகின்ற 15ம் தேதி சந்தனக் கூடு திருவிழா.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மேல்படி திருவிழாவிற்கு பாகிஸ்தானிலிருந்து அரசு அதிகாரிகள் வருடந்தோறும் வந்து மஹானி(?)ன் அருளைப் பெற்று, மஹானுக்கு விலை உயர்ந்த புதிய போர்வையும், தர்ஹாவை பராமரிப்பதற்கும், தர்ஹா ட்ரஸ்டிகளுக்கும் லட்சக் கணக்கான பணமும், அன்பளிப்புகளும் கொடுப்பதுண்டு.

இதுவல்லாமல் மேல்படி திருவிழாவில் கலந்து கொண்டு மஹானி(?)ன் ஆசியைப்பெற்று உண்டியலை நிரப்புவதற்கு அதிகாரிகள் அல்லாத ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களும் வருவதுண்டு.

அஜ்மீர் தர்ஹா அவுலியாவுக்கு இந்திய பக்தர்களை விட பாகிஸ்தான் பக்தர்கள் அதிகம் எனலாம். 

அதனால் கந்தூரி எப்பொழுது வரும் ? சந்தனக் கூடு எப்பொழுது வரும் ? பாகிஸ்தானியர்கள் வந்து கவனிக்க மாட்டார்களா ? என்று காலண்டரில் உள்ள ஒவ்வொரு தாளை(நாளை)யும் தர்ஹா ட்ரஸ்டிகள் ஆர்வமாய் கிழிப்பதுண்டு.

அதனடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களே சந்னக்கூடு திருவிழாவிற்கு பாக்கி இருக்கையில் எல்லை தாண்டி வந்து இரண்டு இந்தியர்களின் தலையை துண்டித்ததாலும், சரப்ஜித் சிங்கை சிறையில் அடித்துக் கொன்றதாலும் இந்த ஆண்டு அஜ்மீர் தர்ஹா சந்தனக் கூடு திருவிழாவிற்கு பாகிஸ்தான் அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், அவர்களுக்கு மஹானி(?)டத்தில் விசேஷ பூஜை செய்ய மாட்டோம் என்றும் அஜ்மீர் தர்ஹா ட்ரஸ்டிகள் அதிரடியாய் அறிவித்து ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டனர்.

அதிர்ச்சியில் மூழ்கிப் போன நாம் தகவலைத் துலாவி எடுக்க முற்பட்ட வகையில் இது ட்ரஸ்டிகள் தாமாக அறிவித்தது அல்ல மாறாக சங்பரிவாரங்களினால் அறிவிக்க வைத்தது என்பதை விளங்கிக் கொண்டோம்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவனானி பாகிஸ்தான் அதிகாரிகளை அனுமதிக்கக் கூடாது என்று அவர்களை எச்சரித்ததுடன், அறிக்கையும் விட வைத்துள்ளார்.

அஜ்மீர் தர்ஹாவில் அருள் இல்லை என்பது தனி விஷயம் ஆனாலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தின் உரிமைகளைப் பறிப்பது, அன்டர் கிரவுண்டில் மிரட்டல் விடுவது, நாங்கள் நினைத்தால் தான் நீங்கள் வாழ முடியும் என்று வெளிப்படையாக சவடால் விடுவதுப் போன்ற சங்பரிவார இந்திய தேச துரோகிகளின் வரம்பு மீறிய செயல்களை, சொற்பிரயோகங்களை அரசாங்கம் கண்டு கொள்ள மறுப்பது ஜன நாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.

வெட்கி தலை குணிய வேண்டிய காரியம்.
இத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அதுவும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலிருந்து அரசு அதிகாரிகள் (முஸ்லீம்கள்) இந்தியாவுக்கு தர்ஹா தரிசனத்திற்கு வருவதை நினைத்து வெட்கி தலைக் குணிய வேண்டி உள்ளது.


அஜ்மீரில் கடந்த 2012ல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது அஜ்மீர் தர்ஹா அபிமானிகளுக்கு பலனளிப்பதாக அமையும் என்று நினைக்கிறோம்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பம் ஒன்றரை வருடமாக வறுமையில் வாடியக் காரணத்தினால் ஜோதிடரை அணுகி வறுமை நீங்குவதற்கான வழியைக் கேட்டுள்ளனர். 

அதற்கு 40 நாட்கள் குடும்பத்துடன் அஜ்மீர் தர்ஹாவில் தொடர் உண்ணாவிரதம் இருந்தால் வறுமை நீங்கிவிடும் என்று எதிர்காலத்தை கணித்து(?) ஜோதிடர் கூற அதை அப்படியே நம்பிய அந்த அப்பாவி குடும்பத்தினர் அஜ்மீர் தர்ஹா வாசலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். 

அக்டோபர் 12, 1012 அன்று 39 வது நாளை நெருங்கியதும் மேல்படி குடும்பத்தினர் 12 பேரில் 16,22,23 வயதையுடைய வளர்ந்து வேர் விடக்கூடிய 3 வாலிபக் குருத்துக்கள் அநியாயமாக கருகி மூர்ச்சையாகினர். மீதி 9 பேரும் கவலைக்கிடமாகி உயிருக்குப் போராடும் நிலையில் தர்ஹா ட்ரஸ்டிகளாகிய கல்நெஞ்சர்களால் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். ( அந்த 9 பேரும் என்ன ஆனார்கள் என்று  தெரியவில்லை ). 

பக்கத்து மாநிலத்திலிருந்து வந்து வறுமை நீங்கக் கோரி வாசல் கதவருகே துடியாய் துடித்து செத்து மாண்டவர்களை காப்பாற்ற முடியாத மஹான்(?) கடல் கடந்து வந்த பாகிஸ்தானிகளின் கோரிக்கையையா நிறைவேற்றப் போகிறார் ?. ஒருக்காலும் நிறைவேற்ற முடியாது !.

ஒரு ''யைக் கூட படைக்க சக்தியற்றவர்கள்.
ஒரு ''யைக் கூட படைக்க அருகதை அற்றவர்களால் உயிரை தடுத்து நிருத்த முடியுமா

22:73. மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் பிரிந்து செல்லும் உயிரையும், நிகழ இருக்கும் சம்பவத்தையும் உலகில் எவராலும் தடுத்து நிருத்தவே முடியாது.
 
ஏன் தங்களை தாங்களே காத்துக் கொள்ள முடியாத பலஹீனர்கள் தான் கேட்போரும், கேட்கப்படுவோரும் என்பதை எவ்வளவு அழகான உவமையில் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பதை கவனியுங்ள்.

உயிருள்ள எவரின் கோரிக்கையையும், உயிரற்ற எவரும் கேட்க முடியாது.
உலக அதிபதி அல்லாஹ் ஒருவனால் மட்டுமே அழைப்போர்களின் அழைப்புக்கு பதிலளிக்க முடியும், (கோரிக்கையை எற்றுக் கொள்ள முடியும்) உதவி புரிய முடியும்.

''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். 40: 60. 

திருமறையைப் புரட்டுங்கள் அல்லாஹ் அல்லாதோருக்கு சிரம் பணிவது, வேண்டி நிற்பது பொண்ணான நேரத்தை வீணடிக்கும் செயல் என்பதையும் அது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பதையும் உணருவீர்கள். 

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். 4:48.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
 

திங்கள், ஜூன் 11, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெரால்...


ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் கழுத்தறுக்கும் கத்தி ?
கூறுகிறார் வாஸ்து சாஸ்திர வியாபாரி ராஜ்குமார் ஜான்ஹரி ?

வரலாறு காணாத அளவுக்கு உலக அரங்கில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து இன்று இந்தியாவின் பொருளாதாரத்தையே அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு ஆக்கி விட்டது.
  
ரூபாயின் மதிப்பு வீழ்வதை தடுத்து நிருத்த ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமரும், நிதியமைச்சரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி திட்டங்கள் வகுத்து அதில் சிலவற்றை செயல்படுத்தி வருவதை அறிந்து வருகிறோம்.

உலக அரங்கில் ரூபாயின் வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாதாரக் கொள்கையேக் காரணமென்று எதிர்கட்சிகளும், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் காரணமென்று ஆளும் கட்சியும் மாறி மாறிக் கூறி வருகின்றன.

இதில் எது சரியோ ? ஆனால் 2010ல் இந்திய ரூபாய்க்கு வரையப்பட்ட புதிய சின்னம் தான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமென்று அறிய கண்டு பிடிப்பு ஒன்றை கண்டு பிடித்துக் கூறி உள்ளார் வாஸ்து சாஸ்திர வியாபாரி ராஜ்குமார் ஜான்ஹரி என்பவர்.


புதிய சின்னத்தில் 'ஆர்' என்ற ரோமானிய எண் மற்றும் இந்தியில் பயன்படுத்தப்படும் 'ரா' என்ற எழுத்துக்கான தேவநகரி மொழி கலந்த வடிவத்துடன் அதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல் அமைந்திருப்பது தான் உலக  நாடுகளில் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமென்று அறிவுக்குப் பொருந்தாத விளக்கமொன்றைக் கூறி உள்ளார்.

மேல்படி சின்னத்தை உருவாக்கிய சென்னையைச் சேர்ந்த உதயகுமார் கூறுகையில் தேசிய கொடியின் மூன்று வண்ணங்களை மனதில் வைத்தே தேச பக்தியை வெளிக்காட்டும் விதத்தில் இதை உருவாக்கினேன் அப்பொழுது அனைவரையும் அதுக் கவர்ந்திருந்தது இப்பொழுது இப்படிக் கூறினால் நான் என்ன செய்வது என்று வருந்துகிறார். ( வருந்தத் தேவை இல்லை இந்த ஜோதிடர்களின்  பிழைப்பே இது தான் )

2010ல் புதிய சின்னம் அச்சிடப்பட்ட ரூபாய் வெளியிடப்பட்டப் பிறகே மேற்காணும் படு மோசமான வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அப்பொழுதே வாஸ்து சாஸ்திரத்தில் கணித்து இந்த சின்னத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியதாகவும் ராஜ்குமார் ஜான்ஹரி புளம்பி உள்ளார்.  

இவர் கூறுகின்றப் பிரகாரம் புதிய சின்னம் அச்சடிக்கப்பட்டக் கரன்சி வெளியான 2010 லிருந்து தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததாகக் கூறுவது அவருடைய அறியாமையை அல்லது வாஸ்து சாஸ்திரத்திற்கான விளம்பரத்தை இது நோக்கமாக கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


2010க்கும் ரூபாயின் சரிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
சுதந்திரத்தின் போது டாலருக்கு நிகராக இருந்த ரூபாயின் மதிப்பு அதற்கடுத்தடுத்து சிறிது சிறிதாக சரியத் தொடங்கி 1990லிருந்து அசுர வேகத்தில் சரிந்து இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. 1990ல் 18 ரூபாய்க்கு வாங்கிய டாலர் இன்று 55 ரூபாய்க்கு வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது.

புதிய சின்னம் அச்சடித்து வெளியிடப்பட்ட 2010க்கும் ரூபாயின் சரிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அதற்கு பல வருடங்களுக்கு முன்பே சரியத் தொடங்கி விட்டது என்பதை இவரும் இவரைப் போன்ற வாஸ்து சாஸ்திர வியாபாரிகளும், வாஸ்து சாஸ்திர நம்பிக்கையாளர்களும் புரிந்து கொள்ளட்டும்.

எந்த வாஸ்து சாஸ்திரத்தை தூக்கி நிருத்தவதாற்காக இந்த சந்தர்ப்பத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்தினாரோ அதுவே இதற்கு எதிராக அமைந்து விட்டது.

தேவையற்ற பில்டப்பினால் வந்த வினை.
அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, பிரிட்டிஷ் பவுண்டு, ஜப்பான் என் என வளர்ந்த நாடுகளின் கரன்சிக்கு சின்னங்கள் உள்ளது போல, இந்திய கரன்சியான ரூபாய்க்கும் சின்னம் வேண்டும் என்று 2009ம் ஆண்டு பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தான் இந்தியா முழுவதும் போட்டி வைத்து அனைவராலும் ஈர்க்கப்படுகின்ற அளவுக்கு சிறப்பான சின்னம் வரைபவருக்கு பரிசும் அறிவித்து மேல்படி சின்னம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

புதிய சின்னம் தேர்வு செய்யப்பட்டதும் 'இந்த சின்னம்  நமது கலாசாரத்தையும், தனித்தன்மையையும் பிரதி பலிக்கிறது. இது மக்களை கவரும்' என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி மட்டும் அடக்கமாக அறிவித்திருந்தார்.


ஆனால் ந்த சின்னத்தால் இந்திய ரூபாயின் வலிமை அதிகரிக்கும். சர்வதேச அளவில் பிரபலமாகும். அண்டை நாடுகளில்  இந்திய ரூபாய் தனித்துவம் பெறும் என ஒரு சில ஆளும் கட்சியினராலும் சில பொருளாதார நிபுணர்களாலும் கா, ஓகோ என்று அளவுக்கு மீறி அவசியமில்லாமல் புகழ்ந்து தள்ளப்பட்டது.

இந்த சின்னத்தால் தான் இந்திய ரூபாய் உலக அளவில் உயர்ந்து நிற்கப் போகிறது என்ற தேவை இல்லா பில்டப்பும் அதன் பின்னர் ஏற்பட்ட சரிவும் தான் ராஜ்குமார் ஜான்ஹரியைப் போன்ற வாஸ்து வியாபாரியால் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் வாஸ்து சாஸ்திரத்தை தூக்கி நிலை நிருத்த முயற்சி செய்தனர். 

வணிகமாகி விட்ட வாஸ்து  சாஸ்திரம்.
எதிர் காலத்தை கணித்துக் கேட்பதற்காக ஜோதிடனிடமோ அல்லது வீடோ, கடையோ கட்டுவதற்காக வாஸ்து சாஸ்திரக் காரனிடமோ தட்சனை என்ற கைக் கூலி இல்லாமல் யாராலும் போக முடியாது.


வயிற்றுக்காக உடல் உழைப்பு இல்லாத எத்திப் பிழைக்கும் பிழைப்பு தான் மனிதர்களில் சிலர் உருவாக்கிக் கொண்ட ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், போன்றவைகள். (இவர்களை காப்பி அடித்து உருவாக்கியது தான் பால் கித்தாபு ).

இவர்களின் வேதங்கள் இவற்றை வெளிப்படையாகவே வலியுருத்துகிறது, இந்த தீமைகளை வலியுருத்தும் வேதம் கடவுளின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது. இதிலிருந்தே மேல்படி  வேதங்களை இவர்களின் முன்னோர்கள் (மனிதர்கள்) எழுதியவைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆதாரம்:  வேதத்தில் வாஸ்து ...

வேதங்களில் தனித்து விளங்கும் திருமறை
உலகில்  உள்ள எந்த மனிதராலும் நாளை என்ன நடக்கும் என்பதை கணித்துக் கூறவே முடியாது அது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும் என்று உலக பொதுமறை திருக்குர்ஆன்  இயம்புகிறது.

6:59. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்429 உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை. திருக்குர்ஆன்: 6:59


மேலும் அறிய...



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்