செவ்வாய், அக்டோபர் 18, 2011

.


காலைக் கழுவி விடும் போப்புகள்


ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளைகள்.

மேற்கானும் அரச குடும்பத்தினரின் காலைக் கழுவி விட்டுக் காலில் முத்தமிட்டு காலில் விழுந்து கும்பிடும் வழிகேடர்கள். அவ்வப்பொழுது உலகம் போற்றும் உத்தம சீலர் உண்ணத தலைவர் மாமனிதர்(ஸல்) அவர்களை மணம் போனப் போக்கில் சீண்டுவார்கள். அவ்வாறு சீண்டுவதற்கு இவர்களுக்கு கொஞ்சமேனும் தகுதி இருக்கிறதா ? என்பதை மேற்கானும் சித்திரங்கள் பறைசாற்றுவதை கவனிக்கலாம்.

மாமனிதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றில் ஓர்நாள் :
முஆத் பின் ஜபல் என்கிற நபித்தோழர் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பி வருகிறார்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் கீழ்கானுமாறு கூறுகிறார்கள்

ஏக இறைவனின் திருத்தூதர் அவர்களே ! நான் பல நாடுகளுக்கும் வியாபார நிமித்தம் சென்றுள்ளேன் அங்கெல்லாம் மக்கள் அவர்களுடைய மன்னர்களுக்கு குனிந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கண்டேன் உங்களுக்கு சாஷ்டாங்காம் செய்யலாமா ? நீங்களோ இறைவனுடைய தனிப்பெரும் தூதர் அதற்கு தாங்கள் மிகவும் தகுதியானவராயிற்றே எனக்கூறுகிறார்கள்

அதற்கு நபியவர்கள் : முஆதே ! இந்த மடமையிலிருந்து மனிதர்களை விடுவிக்கவே நான் நபியாக உலகுக்கு அனுப்பப்பட்டுள்ளேன். உலகில் யாராவது யாருக்காவது சாஷ்டாங்கம் செய்யலாம் என இருந்தால் மனைவியை கணவனுக்கு சாஷ்டாங்கம் செய்யச் சொல்லி இருப்பேன் ஆனாலும் அது இறைவனுக்கே உரிய தனி உரிமையாகும் என்பதால் அதையும் தடை செய்கிறேன். நபிமொழி

மடமைக்கு அந்த இடத்திலேயே சாவுமணி அடித்தார்கள் அதனால் இன்று உலகில் வாழும் 75 சதவிகிதத்திற்கு மேலான மக்களுடைய மனதில் நபிகளார் நீங்காத இடம் பெற்றவர்களானார்கள்.

நபிகள் நாயகத்தின் வரலாற்றில் மேலும் ஒரு நாள்.
நபிகள் நாயகம் ஒரு சபைக்கு வருகிறார்கள் அப்பொழது அவர்களைக் கண்டதும் அவர்களுடைய தோழர்கள் எழுந்து நிற்கிறார்கள் எழுவதைக் கண்டதும் நபிகளார் தடுக்கிறார்கள். எவரொருவர் அல்லாஹ்வின் அடிமைகள் தனக்கு எழுந்து நிற்பதைக்கண்டு சந்தோஷம் அடைகின்றாரோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும். நூல் புகாரி.

எனக்கூறி அங்கேயே மனிதனுக்கு மனிதன் எழுந்து நிற்கும் மரியாதை எனும் அடக்கு முறையை ஒடுக்குகிறார்கள்> மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதை ஏற்றுக்கொள்கிற மனிதன் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றால். தனதுமுன் நெடுஞ்சான்கிடையாக மனிதர்களை வீழ்ந்து கிடக்கவைத்த உங்களுடைய நிலை நரகில் எதுவாக இருக்கும் ? ? ?

இறைவனின் இறுதி நபியின் வாழ்வில் மேலும் ஒரு நாள்

ஒரு திருமனத்திற்கு நபியவர்கள் செல்கிறார்கள் அங்கு ஒருசிறுமி நபியவர்களைப் புகழ்ந்து பாடுகிறாள். அப்பாடலை நபிகள் நாயகம் செவியேற்றதும் உடனடியாக நிருத்தும்படிக் கோருகிறார்கள் அத்துடன் மரியமின் மகன் ஈசாவை (ஏசுநாதரை) புகழ்ந்தது போல் என்னைப் புகழாதீர்கள் நான் மரணித்தப்பின் எனதுகல்லறையை வணங்குமிடமாகஆக்கிவிடாதீர்கள்.மிஷ்காத். எனக்கூறி சமாதி வழிபாட்டிற்கு அங்கேயே சமாதி கட்டி விடுகிறார்கள்.

  • அண்ணல் நபியவர்கள் தான் பிறரால் புகழப்படுவதை தடை செய்தார்கள்>
  • தனக்குப் பிறர் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள்>
  • தனக்கு சாஷ்டாங்கம் செய்வதை தடை செய்தார்கள்.

மேற்கூறப்பட்டவைகள் மனிதர்களால் தன்னைப்போன்ற பிற மனிதனுக்கு நிகழ்த்தப்பட்டால் சகோதரத்துவம் குழி தோண்டிப் புதைக்கப்படும் அதனால் அவைகளை நபிகள் நாயகம் வாழும் காலத்திலேயே அவைகளை குழி தோணடிப் புதைத்தார்கள் . அதனால் இன்று அவர்கள் மாமனிதர் எனும் அந்தஸ்தில் நிலைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் அறிமுகப்படுத்திய சகோதரத்துவம் இன்றளவும் கிஞ்சிற்றும் சிதறாமல் நிலைபெற்றுள்ளன அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

கிருஸ்துக்குப்பின் 15 நூற்றாண்டுகள் உலகை கிருஸ்தவ திருச்சபை கோலோச்சியது. அந்த 15 நூற்றாண்டுகள் காரிருள் சூழ்ந்த காலம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடு;கிறார்கள்.

காரிருள் சூழ்ந்த அந்த காலகட்டத்தில் தான் இறைவன் அவர்களிலிருந்தே விஞ்ஞானிகளை உருவாக்கினான். அவ்வாறு உருவான விஞ்ஞானிகளை கிருஸ்தவ பாதிரிகள் காட்டுமிராண்டித் தனமாக கொலை செய்தார்கள்.

ஏன் கொலை செய்தார்கள் ?

அவர்கள் கண்டு பிடித்துக் கூறும் அறிய தகவல்கள் அவர்களுடைய பைபிளில் கூறப்படாதது தான் முக்கிய காரணம்.

அதனால் தான் முதன் முதலில் உலகம் உருண்டை என்றுக்கூறிய கலிலியோ அடித்தேக் கொல்லப்பட்டான்.

வல்ல அல்லாஹ் மேலும் மேலும் பல விஞ்ஞானிகளை அவர்களிலிருந்தே உருவாக்கி அறிய பல தகவல்களை உலகுக்கு கொடுக்கச் செய்தான்.

அவ்வாறு உலகுக்கு கொடுக்கச் செய்த அனைத்து தகவல்களும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் கூறி விட்டான்.

இறைவன் ஏன் தொடர்ந்து விஞ்ஞானிகளை அவர்களிலிருந்தே உருவாக்கினான் ?

அவர்கள் ஆராயச்சி செ;யது கூறும் அறிய தகவல்கள் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டதால் குர்ஆன் அல்லாத வேதக்காரர்களைக் கொண்டு ஆராயச் செய்து அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த அறிய தகவல்கள் எந்த வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதோ அதுவே இறைவேதம் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வதுடன் வல்ல அல்லாஹ் அவர்களைக் கொண்டே உலகுக்கு அவைகளை அறிவிக்கவும் செய்தான்.



அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம் உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாரத்துக் கொண்டிருக்கிறான் என்பது Nபுhதுமானதாக இல்லையா திருக்குர்ஆன்:  41:53      

கவனத்தில் கொள்க! அவர்கள் தமது இறைவனை சந்திப்பதில் சந்தேகத்திலேயே உள்ளனர். கவனத்தில் கொள்க! அவன் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக அறிபவன.; திருக்குர்ஆன்: 41:54.     




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்