சனி, மே 12, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

அசைவத்திற்கு மாறிய சைவ மடம்.


சந்தி சிரிக்கும் சாமியார்களின் குடுமிப் பிடி சண்டை.

15 நூற்றாண்டுகளுக்கு முன் சைவ சித்தாந்தங்களை பரப்புவதற்காக திருஞானசம்பந்தர் என்பவரால் மதுரை ஆதீனமடம் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் 292வது ஆதீனமாக 1980ம் ஆண்டில் இருந்து அருணகிரிநாதர் (இப்போதைய ஆதீனம்) இருந்து வருகிறார்.

இவருக்கு அடுத்ததாக இந்தப் பொறுப்பில் ஒருவரை நியமிப்பதற்கு இவருக்கே முழு அதிகாரம் இருப்பதாகக் கூறி பிற ஆதீனங்களின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நித்யானந்தாவுக்கு அருணகிரி நாதர் முடிசூட்டி உள்ளார்.

இதற்காக நித்யானந்தாவிடம் அருணகிரி நாதர் ஐந்து கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவசரமாக மூடிசூட்டி விட்டதாக பிற ஆதீனங்களின் மடாதிபதிகள் போர் கொடி தூக்கி உள்ளனர். 

இந்த நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அருணகிரி நாதருக்கு பிற ஆதீனங்கள் கூடி முடிவெடுத்து பத்து நாட்கள் கெடுவும் விதித்துள்ளனர்.
இந்த நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அருணகிரிநாதருக்கு கெடு விதித்த அனைத்து ஆதீனங்களின் மீதும் பெங்களுர் பிடுதிபீட பக்தகர்களைக் கொண்டு மானநஷ்டஈடு வழக்கு தொடருவேன் என்று அருணகிரி நாதருக்கு ஆதரவாக நித்யானந்தா மிரட்டல் விடுத்துள்ளதுடன், பாலியல் குற்ற்சாட்டு என்மீது சுமத்தப்பட்டதால் தான் என்னை எதிர்ப்பதாகக் கூறுகின்ற நீங்கள் உங்கள் ஒவ்வொருவருடைய அறைகளிலும் கேமராப் பெறுத்தத் தாயாரா ? என்று சவடால் விட்டு அனைத்து சாமியார்களின் அந்தப் புறமும் அசிங்கம் நிறைந்தது தான் என்பதை நாசூக்காகக் கூறி உள்ளார்.

இதுவல்லாமல் மதுரை, திருச்சிப் போன்ற பெருநகரங்களில் அருணகிரிநாதர் மற்றும் நித்யானந்தாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பதிலுக்கு நாங்களும் எங்களுடைய ஆதரவாளர்களைக் கொண்டு பிற ஆதீனங்களின் உருவ பொம்மைகளை எரிப்போம் என்று இருவரும் சேர்ந்து அறிவிததுள்ளனர்.

இந்த நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கௌதம் என்ற வழக்கறிஞரும் வழக்கு தொடுத்துள்ளார் மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இந்து அறநிலையத்துறையை அணுகுமாறும் ஆலோசனைக் கூறி ஜூன் 4க்கு வழக்கை ஒத்தி வைத்து விட்டனர்.

ஆனால் ரஞ்சிதாவுடனான மேட்டரை மட்டும் இதுவரை நீதிமன்றம் தான் விசாரித்து வருகிறது என்பது தனி விஷயம். (பத்திரிகைகள், தொலைகாட்சிகள் தொடங்கி வழக்கறிஞர், நீதிபதிகள் உட்பட பலகோடி ரூபாய்களை தன்னிடமிருந்து கறந்து விட்டதாக நித்யானந்தாவே கூறியது நினைவிருக்கலாம்.)

நீதிமன்றம் கை விட்டதும் இந்து அறநிலையத் துறையை அணுகினால் அது அரசியலாக்கப் படலாம் இதில் அம்மா(?)வின் முடிவு எப்படி அமையுமோ ? நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை சன் குழுமம் வெளியிட்டதாலும், அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்ததாலும் இப்பொழுது அதற்கு மாற்றமான முடிவை அம்மா(?) எடுத்தாலும் எடுக்கலாம் என்று அஞ்சிய பிற ஆதீனங்களின் மடாதிபதிகள் பத்து நாள் கெடுவுக்குப் பிறகு மதுரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக முடிவு செய்து உள்ளனர்.

நியமனத்திற்கான காரணம்.
ஐந்து கோடி ரூபாய் தருவதாக மதுரை ஆதீனத்திடம் நித்யானந்த பேரம் பேசி முன் பணமாக ஒரு கோடி ரூபாயை கொடுத்தப் பிறகு நித்யானந்தாவை மதுரை ஆதீனம் சந்திக்கும் போதெல்லாம் அவருக்கு தங்க கிரீடம் அணிவித்து தங்கத்திலான செங்கோல் கொடுத்து அனுப்பி வைப்பாராம் நித்யானந்தா.

இதில் கூலாகிப் போன மதுரை ஆதீனம் பெங்களூரிலும், திருவண்ணாமலையிலும் வைத்து இரண்டு முறை மதுரை ஆதீனத்தின் 293வது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவிற்கு மூடி சூட்டிவிட்டார்.

ஐந்து கோடி ரூபாய் மேட்டர் வெளி உலகுக்கு தெரிய வந்ததும் அதை ஆதீன வளர்ச்சிப் பணிகளுக்கு கொடுத்ததாக பல்டி அடித்து விட்டார் நித்யானந்தா.  

நித்யானந்தா பல்டி அடிப்பது ஒன்றும் புது மேட்டர் அல்ல என்பதை ஏற்கனவே ரஞ்சிதா மேட்டரில் உலகமே அறிந்து வைத்துள்ளது.

ஆன்மீகத்தின் பெயரால் கோடிக் கணக்கில் சுருட்டி வைத்துக்கொண்டு அந்தப் புறத்தில் உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கும் பெரும் கோடீஸ்வரரான நித்யானந்தா பாலியல் வழக்கில் சிக்கி இமேஜ் உடைந்தப் பிறகு கத்தை கத்தையாகப் பணத்தைக் கொட்டி ஏராளமான இளைஞர், இளைஞிகளை விலைக்கு எடுத்து அவர்களை சீடர்கள் என்றப் பெயரில் மடங்களில் நிறைத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து தியானங்களை நடத்தி தனக்கு பக்தர்களின் ஆதரவிருப்பதாக காட்டிக்கொண்டு ஃபீல்டை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.  

சினிமா நடிகையுடனான முறைகேடான பாலியல் வழக்கை உடைப்பதற்கான அடுத்த முயற்சியே மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பை பல கோடிகளுக்கு விலை பேசி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

யாருடைய எதிர்ப்பைப் பற்றியும் கவலைப்படாமல் இருவரும் தங்க கிரீடத்துடனும், தங்க செங்கோலுடன் வலம் வருகின்றனராம். (பாவம் இந்தியாவின் அடித்தட்டு ஏழைப் பெண்கள் அரை புவுனில் ஒரு செயினை வாங்கி அணிய முடியாமல் தவிக்கின்றனர். இந்த ஆண் கடாய்கள் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை தங்க ஆபரணங்களுடன் தங்க கீரிடமும், தங்க செங்கோலுமாய் உலா வருகின்றனர். இந்த லட்சனத்தில் இவர்கள் தான் சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு தகுதியானவர்களாம் ? அந்தோப் பாவம் இந்து மதம்).   

பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும்.
இந்த மேட்டரில் மிக அழகாக காய் நகர்த்தி வருகிறது பார்ப்பனப் பத்திரிகைகள் நித்யானந்தாவிற்கு ஆதீனம் முடி சூட்டி இருப்பதில் அம்மா(?)வின் அன்டர்கிரவுன்டு ஆசி கண்டிப்பாக இருக்கும் என்பதை அறிந்த பார்ப்பனப் பத்திரிகைகள் நித்யானந்தாவின் நியமனத்தை வீரியத்துடன் எதிர்க்கவும் இல்லை, அதே நேரத்தில் பிற ஆதீனங்களில் போராட்டத்தையும் எதிர்க்க வில்லை. இரண்டும் சரி தான் எனும் தொணியில் எழுதி வருகின்றனர்.

வருமான வரித்துறை.
ஐந்து கோடி ரூபாயை லஞ்சம் கொடுத்து ஆதீனப் பொறுப்பை விலை பேசி எடுக்கும் அளவுக்கு மதுரை ஆதீன மடத்தில் என்ன இருக்கிறது என்று சந்தேகித்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக மடத்திற்குள் புகுந்து சோதனை இட்டதில் நான்கு பெரிய பெட்டிகளில் கணக்கில் காட்டப்படாத பணம், நகைகளை நிறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். 

பல கோடிகள் மதிப்புள்ள மேல்படி தங்க நகை, பணம் ஆகியவைகளை ஒரே இடத்தில் குவித்து வைத்து அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் வீடியோவில் பதிவும் செய்துள்னர். 

மாயமான வைஷன்வியும், கஸ்தூரியும்.
மேல்படி சர்ச்சைக்குப் பிறகு மதுரை ஆதீனத்தின் லெஃப்ட் அன்ட் ரைட்டாக செயல்பட்டு வந்த வைஷ்னவி, கஸ்தூரி என்ற இரு இளம் பெண்களைக் காண வில்லையாம்

மதுரை ஆதீனத்திடம் முதலில் வந்து இணைந்து கொண்டவர் வைஷ்னவி அவர் ஆதீனத்தில் மிகப்பெரும் செல்வாக்கை அடைந்து கொண்டதை அறிந்த அவரது தங்கை கஸ்தூரி பிறகு வந்து சேர்ந்து கொண்டு செல்வாக்கை அடைந்து கொண்டாராம்.

வைஷ்னவி ஆதீனத்தின் வலதுகரமாக செயல்பட்டு வந்ததால் ஆதீனத்தின் சொத்து சம்மந்தப்பட்ட இன்னும் பல ரகசிய தகவல்களை அவர் அறிந்து வைத்திருந்ததால் அவரை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு கடத்தி விட்டதாக பத்திரிகை செய்திகள் கூறின.

அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அது மட்டும் காரணமல்ல தமிழ் நாட்டு சங்கர மடத்தில் தொடங்கி உலகம் முழுவதும் இந்தியாவின் பிரபல சாமியார்கள் நடத்தும் ஆசிரமங்கள், மடங்களில் அதிகமானவைகள் முறை கேடான பாலியல் விவகாரத்தில் சிக்கி இந்து மதத்தின் தொண்மை(?)வாய்ந்த சந்நியாசக் கொள்கையை காற்றில் பறக்கவிட்டதால் மதுரை ஆதீனமடமும் அத்தைகயை முறை கேடான பாலியல் சர்ச்சைக்குள் சிக்கி விடக் கூடாது எனும் நோக்கில் மின்னல் வேகத்தில் மேல்படி இளம்பெண்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஆனால் மடத்திற்குள்ளேயே வேறொரு இரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நித்யானந்தா ஆட்களுக்கும் வைஷ்னவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நித்யானந்தாவின் ஆட்களால் வைஷ்னவி நையப்புடைக்கப் பட்டதும் வைஷ்னவி மடத்திற்குள் மறைந்திருந்த தகவல் வெளியில் கசிந்துள்ளன.

பத்து நாள் கெடுவுக்குப் பிறகு வைஷ்னவி மேட்டர் விஸ்வரூபம் எடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

சாமியார்களும், மடாதிபதிகளும் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகிய திருமனத்தை செய்து கொண்டார்கள் என்றால் இன்னும் சிறிது காலம் இந்து மதம் தாக்குப் பிடிக்கலாம் இதே நிலை நீடித்தால் இந்து மதம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது, 

அந்தளவுக்கு ஆசிரமங்களையும், மடங்களையும் நடத்தும் திருமனம் செய்யாத இளம் சாமியாரிலிருந்து, கிழ சாமியார்கள் வரை நடத்தும் பாலியல் சமாச்சாரங்கள் அசிங்கத்தின் உச்ச நிலையைத் தொட்டு வருகிறது. 

அதனால் தான் நீங்கள் எல்லாம் உத்தமர்கள் என்றால் உங்கள் அறைகளில் கேமராவைப் பொறுத்திப் பாருங்கள் என்று அந்த ஃபீல்டில் நாறிய நித்யானந்தா அறை கூவல் விடுகிறார்.

எதிர்ப்பிற்கான காரணம்
நித்யானந்தா மீது பாலியல் வழக்கு இருப்பதால் தான் இவர்களின் எதிர்ப்பும் போராட்டமும் வலுப் பெற்றிருப்பதாக யாரும் கருத வேண்டாம்.
  
மதுரை ஆதீனத்தின் மடாதிபதி பொறுப்புக்கு வருபவர் சைவ வேலாளர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் நித்யானந்தாவோ அசைவ முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தான் ஆதீனங்களின் எதிர்ப்புக்கு காரணம் என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு இருப்பதால் தான் பிற ஆதீனங்கள எதிர்ப்புத் தெரிவிப்பது உண்மை என்றால் இவர்கள் சங்கராச்சாரியாரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து சங்கரமடத்திலிருந்து வெளியேற்றி வீதிக்கு அனுப்பும் வரை எதிர்த்திருக்க வேண்டும், தொடர் உண்ணா விரதப்போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்.

ஏன் என்றால் ? நித்யானந்தா மீது இருப்பது பாலியல் வழக்கு மட்டும் தான் சங்கராச்சாரியார் மீது இருப்பதோ பாலியல் வழக்குடன் சேர்ந்து கொலை வழக்கும்  இருக்கிறது.

சங்கராச்சாரியாரால் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் குடும்பத்தினர் கோர்ட்டுக்கு செல்வதற்கு கூட அஞ்சுகின்றனராம் அந்தளவுக்கு சங்கராச்சாரியாரின் ரவுடியிஷம் கொடி கட்டிப்பறக்கிறது. இந்த லட்சனத்தில் அவர் இன்றுவரை அப்பாவி மக்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறாராம்.

அதனால் நித்யானந்தாவின் பாலியல் வழக்கு ஒரு மேட்டரே அல்ல இந்து மத சாமியார்கள், மடாதிபதிகளின் இரத்தத்தில் ஊறிப் போன மத வெறியும், சாதி வெறியும் தான் ஆதீனங்களின் கோபத்திற்கு காரணம் என்பதை மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர்.

இனவெறிக்கு முடிவு கட்டியது இஸ்லாம்.
அனைத்து மக்களுக்கும் அறிவைப் புகட்டுவதற்காக அனுப்பப்பட்ட அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையில் மனிதனை ஆட்டிப் படைக்கும் இன வெறியையும், மொழி வெறியையும் அவர்களது காலுக்கடியில் போட்டு மிதிப்பதாக மொழிந்தார்கள்.

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். புகாரி, முஸ்லீம்.

இந்து மத சாமியார்கள் மடாதிபதிகள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் கூற்றை ஏற்றுக் கொண்டால் நித்யானந்தாவுக்கு ஒரு நிலைப்பாடு சங்கராச்சாரியாருக்கு ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்க மாட்டார்கள். இருவரும் கிரிமினல்கள் என்ற தெளிவான முடிவுக்கு வந்திருப்பார்கள்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்